கடி கடி ஜோக்ஸ்

ந‌ண்ப‌ர் 1: ந‌டிக‌ருக்கும் ம‌ருத்துவ‌ருக்கும் என்ன‌ ஒற்றுமை ?
ந‌ண்ப‌ர் 2: தெரிய‌லையேடா?
ந‌ண்ப‌ர் 1:இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட்ட‌ர்ல‌ யாரையாவ‌து போட்டு அறுத்துகிட்டு இருப்பாங்க‌.

-------------------------------------------------------------------------------


ந‌ண்ப‌ர் 1: நேற்று என்னோட‌‌ க‌ச்சேரிக்கு நீங்க‌ வ‌ருவீங்க‌ன்னு ரொம்ப‌ எதிர்பார்த்தேன் ?

ந‌ண்ப‌ர் 2: வ‌ர‌னும்னுதான் நெனைச்சேன் சார், ஆனா அதுக்குள்ள‌ வேற‌ ஒரு கஸ்டம் வந்திருச்சு
-------------------------------------------------------------------------------

தோழி 1 : உன் வீட்டுக்கார‌ர் காலையில‌ கோல‌மெல்லாம் போடுறாராமே?
தோழி 2 : உன‌க்கு அத‌ யார் சொன்னாடி?
தோழி 1 : என் வீட்டுக்கார‌ர்தான், காலையில‌ கோல‌ம் போடும்போது பார்த்தாராம்.
-------------------------------------------------------------------------------

தோழி 1 : என்ன‌டி இது அனியாய‌மா இருக்கு, உன் வீட்டு வேலைக்காரி லீவு போடறா அன்னைக்கி உன் வீட்டுக்கார‌ரும் லீவு போட‌றாரா?
தோழி 2 : சும்மா இருடி. நான்தான் அவ‌ரை லீவு போட‌ வைப்பேன்,என்னா வேலைக்காரி விட்டுப் போன‌ வேலையை யாரு செய்ற‌து.
-------------------------------------------------------------------------------

ந‌ண்ப‌ர் 1: பொண்ணு கிளி மாதிரின்னு த‌ர‌க‌ர் சொன்ன‌தை ந‌ம்பி க‌ல்யாண‌ம் ப‌ண்ணிய‌து த‌ப்பா போச்சுப்பா?
ந‌ண்ப‌ர் 2: ஏண்டா என்ன‌ ஆச்சு?
ந‌ண்ப‌ர் 1: கிளி மாதிரி பேசின‌தையே திரும்ப‌ திரும்ப‌ பேசி க‌ழுத்தை அருக்கிறாடா.
-------------------------------------------------------------------------------

இய‌க்குன‌ர் : யோச‌னை இல்லாம‌ மெகா சீரிய‌ல் மாதிரி ப‌ட‌ம் எடுத்திட்டோம்?
ந‌ண்ப‌ர் : அப்புற‌மா?
இய‌க்குன‌ர் : நாலு த‌ட‌வை இடைவேளை விடுற‌தா முடிவு ப‌ண்ணிட்டோம்.

கவலைப்படாதே சகோதரா - சிறு கதை

காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.

அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.

அதைப்பார்த்த சிங்கம், "ஏய்........ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்.........."என்றது.

அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!

கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. 

அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.

அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!

தேர்வு அறை நகைச்சுவை

ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க ?

மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு".

கணவன் VS மனைவி - நகைச்சுவை


கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..? 

மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி 
சொல்றீங்க..! 

******************************​***************** ***********************************

கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ? 

மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா 
இருக்கேன்னு..! 

******************************​***************** ***********************************

மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?

கணவன் : எப்படி கண்டுபுடிச்சே? 

மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில 
நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..! 

******************************​***************** ***********************************

கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ? 

மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா? 
தினமும் s t d போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு... 

******************************​***************** ***********************************

மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க .. 

கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று.. 

******************************​***************** ***********************************

டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி ? 

கணவன் : அதுதான் தெரியல டாக்டர்! 
ரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப் 
பேசுறா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!

******************************​***************** ***********************************


மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க

கணவன்: ஒண்ணுமில்ல!

மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட 
பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

******************************​***************** ***********************************

மனைவி: டின்னர் வேணுமா?

கணவன்: சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு!

கணவன்: என்னன்ன?

மனைவி: வேணுமா?வேண்டாமா?

******************************​***************** ***********************************

பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் 
நான் பங்கெடுத்துகுவேன� �!

ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!


பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!

மிஸ்டு கால்


என் தாத்தா, அவர் காலேஜ் படிக்கும் போதே, தன் காதலிக்கு ‘மிஸ்டுகால்’ கொடுப்பாராம் !

லேண்ட் லைன்லயா ?

இல்லே... அவங்க வீட்டு ‘காலிங் பெல்லை’ அடிச்சிட்டு ஓரமா ஒளிஞ்சிப் பாராம் ! 

நீண்ட நாள் உயிரோடு வாழ என்ன செய்யணும்?


நீண்ட நாள் உயிரோடு வாழ என்ன செய்யணும்?

ம்ம்ம் சாகாம இருக்கணும்..

--------------------------------------------------------------------------------------

எலக்ட்ரிக் ஒயர்ல 3 எறும்பு போயிட்டு இருந்தது... அதுல ரெண்டு எறும்புக்கு மட்டும் ஷாக் அடித்தது.. ஒரு எறும்புக்கு அடிக்கல. ஏன்?

ஏன்?

ஏன்னா... அது கட்ட எறும்பு...

--------------------------------------------------------------------------------------

ஒரு மனிதன் எப்போது முழு மனிதன் ஆகிறான்?

கடைசி சென்டிமீட்டர் வரை வளர்ந்ததும்..

--------------------------------------------------------------------------------------

வாழ்க்கைல வழுக்கி விழுந்தவங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?

இனிமேலாவது நடக்கும்போது ஜாக்கிரதையாய் நடங்க...

--------------------------------------------------------------------------------------

ஏன் அவர் தலைகீழ கையால நடந்து வரார்..?

அவர் தண்ணி அடிச்சிருக்கார்.. நேரா நடந்த எல்லாம் தலைகீழா தெரியுதாம்....

--------------------------------------------------------------------------------------

சீக்கிரமா ஒரு பேப்பர் தோசை கொண்டு வாப்பா....

சீக்கிரம் நா நேத்திய இஷ்யு தான் கெடைக்கும் பரவாயில்லையா?

--------------------------------------------------------------------------------------

கேரட் பச்சையா சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுன்னு சொன்னாங்க னு எல்லா கடைலயும் தேடி பார்த்தேன்,, கிடைக்கவே இல்ல

அப்படியா?

அமாம்... எல்லா கடைலயும் கேரட் ஆரஞ்சு கலர் ல தான் இருக்குது 

நோ நோ..... குச்சி எல்லாம் தேடக்கூடாது  ....

சிரிச்சிட்டு பாவம் சின்ன புள்ள னு விட்டுட்டு போய்டணும்...

சிரிப்போமா


தொண்டர்1: எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?

தொண்டர்2: ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்

____________________________________________________________



திருடன்: டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை 

போலீஸ்: டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை

_________________________________________________________

ஒருவர்: அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ?

மற்றவர்: மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம்.

இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து

“யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..”

“ஏன்..?”

“பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!” 

சிரிக்கலாம் வாங்க - தமிழ்நாடு மின்வாரியம் ஸ்பெஷல்


நபர் 1 : என்ன சார்! சுவிட்ச் போர்டு தண்ணி ஊத்தி கழுவுறீங்க! ஷாக் அடிசிரும்லே!

நபர் 2 : என்ன தம்பி! நீங்க தமிழ்நாட்டுக்கு புதுசா?

-------------------------------------------------------------------------------------------------------------------------------

என் மகனும் கரண்ட்டும் ஒன்னு.

அவ்ளோ சுருசுருப்பா?

அட நீ வேறே. ரெண்டுமே வீட்டிலே இருக்கிறது இல்லை.