எம்.ஜி.ஆர் VS விஜய்

வித்தியாசம் 1:
எம்ஜிஆர்: இலங்கை கண்டியிலே பிறந்தார். சினிமாவில் நடிக்கவேண்டி தமிழகம் வந்து சாதித்தார். தமிழகத்திலே திருமணம் செய்தார்.

விஜய் : தமிழகத்திலே பிறந்தார். இலங்கையிலே பெண் எடுத்தார். தமிழக மக்களின் பொருமையைச் சோதிக்க வேண்டி சினிமா பீல்ட்டினைத் தேர்ந்தெடுத்தார்.


வித்தியாசம் 2:
எம்ஜிஆர்: சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் நாடகங்களில் சின்ன சின்ன அதாவது பிட்டு பிட்டான வேடங்களில் நடித்து சினிமாவுக்குள் கதாநாயகனாகப் புகுந்தார்.

விஜய் : ஆரம்பம் முதலே பிட்டு படங்களில் தான் அறிமுகமானார். கேரளத்திலே ஷகிலா படம் எந்த அளவிற்கு போனதோ அந்த அளவிற்கு அதிரிபுதிரியாய் தமிழ்நாட்டில் ஓடியது இவரது படங்கள். அதன் முழு வேலையையும் அவரது தந்தைதான் கவனித்துக்கொண்டார் என்பது தான் இங்கே முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.


வித்தியாசம் 3:
எம்ஜிஆர்: படங்களில் விதவிதமான வேடங்கள் போட்டு நடித்தார். நிறைய படங்களில் மாறுவேசம் போட்டுக்கொண்டு முகத்தில் மரு வைத்துக்கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டே வந்து உளவு பார்ப்பார். அந்த திரிலிங்கை ரசிக்காதவர்களே இருக்க முடியாது .

விஜய் : மாறுவேசம் தேவையில்லை. சொந்த வேசத்தில் நடித்தாலே மக்களுக்கு சிரிப்பு தான் வரும். சரி செஞ்சி தான் பாப்பமே அப்டின்னு “போக்கிரி” படத்துல போட்ட ஒரு போலீஸ் வேசத்த பாத்துட்டு, சிரிச்சி சிரிச்சி சிரிப்ப‌ நிறுத்த முடியாம ஏர்வாடிக்கு போன ரசிக கண்மனிகள் இன்னும் திரும்பவேயில்லை.


வித்தியாசம் 4:
எம்ஜிஆர்: இவர் படங்களில் அதிகபட்சம் ஒரு வில்லன் தான் இருப்பார். வில்லனிடமிருந்து கதாநாயகியை மீட்க குதிரையிலே துரத்திக்கொண்டு ஓடுவார். அது மட்டுமின்றி அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரையில் ஓடிப்போய் தாவி ஏறிவிடுவார்.

விஜய் : இவர் படம் முழுவதும் வில்லன்கள் தான் உலா வருவார்கள். ஆனால் எல்லோரையும் மிக புத்திசாலித்தனமாக அதாவது எதிரியை முட்டாளாக்கிவிட்டு (நம்மையும் தான்) சமாளித்து தப்பிவிடுவார். கதா நாயகியை மீட்க மோட்டார் படகு, ஹெலிகாப்டரில் துரத்திச்சென்று மீட்டுவருவார். மேலிருந்து தாவி வந்து ஓடும் ரயிலில் சர்வசாதாரணமாக ஏறுவார். உஷ்.., இப்பவே கண்ணக் கட்டுதே!


வித்தியாசம் 5:
எம்ஜிஆர்: தன் அண்ணன் சக்ரபாணியை எப்படியாவது முன்னனி நடிகராக்க வேண்டும் என தன் படங்களில் அவருக்காக சிபாரிசு செய்தார். அதன் மூலம் அவரும் நிறைய படங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகராக உருவெடுத்தார். அண்ணன் மீது அவ்வளவு பாசம் கொண்டவர் புரட்சித்தலைவர்.

விஜய் : தன் தம்பி நடிக்க வருகிறார் என தெரிந்ததும் எங்கே தனக்கு ஆப்பு விழுந்துவிடுமோ என பயந்தவர். அவரை கவுக்க என்னவெல்லாம் பிரயோகிக்க முடியோமோ அதையெல்லாம் பயன்படுத்தி அவரது முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றிய வள்ளல். அந்த அளவிற்கு அவர் மீது பாசம் கொண்ட வரட்சித் தளபதி.


வித்தியாசம் 6:
எம்ஜிஆர்: இவர் படங்களில் இவருக்கு நண்பர்களாக யாராவது ஒருவர் தான் (சந்திரபாபு, நாகேஷ், தங்கவேல்) வருவார்கள். தலைவர் போடும் சண்டைக்காட்சிகளில் எல்லாம் அவர்களும் சேர்ந்து சண்டை போடுவார்கள்.

விஜய் : இவர் படங்களில் குறைந்தது 4 முதல் 6 நண்பர்கள் கூடவே வருவார்கள். ஆனால் சண்டைக் காட்சிகளில் காணாமல் போய் விடுவார்கள். காதலுக்கு உதவிசெய்யும் கருவேப்பிலை வேலை மட்டும் தான் அவர்களுக்கு.


வித்தியாசம் 7:
எம்ஜிஆர்: தன் ரசிகர்கள் கூட்டத்தில் அல்லது அரசியல் பொதுக்கூட்டங்களில் தன் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களைப் பார்த்து "என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே" என பேச்சைத் துவக்குவார்.

விஜய் : தன் ரசிகர்களை என்றைக்குமே மதிக்காத, கண்டுகொள்ளாத இவர் ரசிக கண்மனிகளைப் பார்த்து "டேய்...., பேசிக்கிட்டிருக்கோம்ல...., சைலன்ஸ்" அப்டின்னு கத்துவார்.


வித்தியாசம் 8:
எம்ஜிஆர்: இவர் படங்களில் எதிரிகளிடம் மாட்டி கொண்டு சிறையிலே அடைக்கப்படுவார். எதிரிகளின் அகழிகளில் அடைக்கப்பட்டுள்ள‌ சிங்கம், புலி ஆகியவற்றோடு சண்டையிட்டு அவைகளை அடக்கிவிட்டு தப்பிச்சென்று விடுவார்.

விஜய் : விலங்குகளோடு சண்டையிடுவது மிக சாதாரண விசயம் எனக் கருதியதால் இவர் மிசின்களோடு சண்டையிடுவார். நம்ம அலுவலகங்களில் சாதாரணமாகவே லிப்ட் எங்கயாவது மாட்டிக்கிட்டா கம்பிகளை வெல்டிங் வச்சித்தான் உடைத்து எடுப்பார்கள். ஆனால் தளபதியை லிப்ட்டுக்குள் வைத்து அடைத்து தண்ணீருக்குள் முக்கிவிட்டுச் செல்வார்கள். அந்த சமயத்தில் கூட அதை மிகச் சாதாரணமாக உடைத்துக்கொண்டு வெளியே வந்து பாய்ந்து செல்வார். இன்னும் கொஞ்ச நாளில் ஓடும் டிரைனை ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போல அதோடு சண்டையிட்டு நிறுத்துவது மாதிரி சீன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்டித்தான் புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாய்ங்களோ!


வித்தியாசம் 9:
எம்ஜிஆர்: கத்திச் சண்டை, சிலம்பச் சண்டையில் மாவீரன். இவர் படங்களில் சண்டைக் காட்சிகள் அற்புதமாக இருக்கும். பாடல் காட்சிகளை இரண்டு கைகளை ஆட்டியே ஓட்டிவிடுவார்.

விஜய் : இவர் படங்களில் வாய்ச்சண்டை அதிகமாக இருக்கும். கார்களில் குண்டு வைத்து கும்பலாக வெடிக்கும் போது இவர் மட்டும் அங்கிருந்து கூலாக நடந்து வருவார். கப்பலில் இருந்து கயிறு இல்லாமல் குதிப்பார், பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கிக்கொண்டே சண்டையிடுவார். இன்னும் கொஞ்சம் நாட்களில் தன்னை தாக்கவரும் ஹெலிகாப்டரின் வாலைப்பிடித்து மலையில் அடிப்பது போன்ற காட்சிகள் வரலாம். பாடல் காட்சிகளில் இரண்டு கையை ஒரு மாதிரி மேலும் கீழும் ஆட்டிக்காட்டுவார். இப்போது ஒரு கையை உதறிக்காட்டுகிறார்.



வித்தியாசம் 10:
எம்ஜிஆர்: இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு எவ்வளவோ மருத்துவ உதவிகள், திருமண உதவிகள் போன்றவற்றை செய்திருக்கிறார். ஆனால் இவர் செய்யும் உதவிகள் எதுவுமே வெளியே வராது.

விஜய் : இவர் 10 ஜோடிகளுக்கு மிக ரகசியமாக இலவசத் திருமணம் செய்து வைப்பார். ஏழைகளுக்கு இலவச தையல் மிசின், இஸ்திரி பொட்டி வழங்கும் நிகழ்சிகளும் மிக ரகசியமாகத்தான் நடக்கும். காரணம் இவருக்கு விளம்பரமே பிடிக்காது என அவர் தந்தை சொல்லுவார். ஆனால் அடுத்த நாள் இந்த செய்தி, படங்கள் மற்றும் “நான் செய்யும் உதவியை வெளியே சொல்லிக்கொள்வதே இல்லை” என்ற இவரது பேட்டியும் எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்துவிடும்.

"வேண்டா வெறுப்புக்கு புள்ளய பெத்து காண்டா மிருகம்னு பேரு வச்சானுங்களாம். "

இன்னும் முடிவு எடுக்கவில்லை "அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை நடந்தது உண்மைதான்'' நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி

இம்சை அரசன்

என் ஆட்சியில மக்களுக்குச் சந்தோசத்துக்குப்
பஞ்சமே இல்லையாமே, அமைச்சரே !'

'மண்ணாங்கட்டி ! பஞ்சத்தாலே சந்தோசமே
இல்லேங்கறதுதான், உண்மை !'

----------------------------------------------------------------------------------------


மன்னா ! நீங்கள் அப்பா
ஆகிவிட்டீர்கள் !'

'பலே ! எந்த பெண்
அம்மா ஆகியிருகிறாள் ?'


----------------------------------------------------------------------------------------


நீங்க பாட்டுக்கு வீட்டுக்கு
ஒரு குதிரை இலவசம்னு
சொல்லிட்டீங்க, கட்டுப்படியாகாது மன்னா !'

'வீட்டுக்கு ஒரு குதிரை லட்சியம்.
ஆனா, ஒரு கழுதை நிச்சயம்னு
அறிக்கை விட்டுடுங்க !'

----------------------------------------------------------------------------------------

நம் நாட்டு மக்களுக்கு
விடிவுகாலம் வரப்போகிறது
மன்னா !'

'எப்படிச் சொல்கிறாய் ?'

'பக்கத்து நாட்டு மன்னன்
நம் மீது போர் தொடுக்கப்
போகிறான் !'

----------------------------------------------------------------------------------------

மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை
என்று அறிவித்து விடலாமா அரசே?'

'வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம்
படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்!'

காதல் நகைச்சுவை - 2

நான் தினமும் செல் போன்ல பாட்டு கேட்பேன், நீங்க ?

நானும் செல் போன்ல பாட்டு கேட்பேன். ஆனா என் மனைவிக்கிட்ட !


----------------------------------------------------------------------------------------------------------------

உங்க வீட்டுக்காரர் டி.வி. சீரியலைப் பார்த்து, ஏன்
அழுவுறாரு ?'

'நீங்க வேற.... அவர் பார்க்கிறது எங்க கல்யாண கேஸட் !'

----------------------------------------------------------------------------------------------------------------


நீ யாரோ ரெண்டு பேரோட ஊர் சுத்திட்டு
இருக்கியாமே ?'

'யாரோ உங்ககிட்டே ஒண்ணுக்கு ரெண்டா சொல்லியிருக்காங்க !'

----------------------------------------------------------------------------------------------------------------

பஸ்சில்........

எங்கே போகனும் ?

அதோ ! சிவப்பு கலர் சேலை கட்டி இருக்கே அந்த பிகர் பக்கத்தில போகனும் வழி விடுங்க..

----------------------------------------------------------------------------------------------------------------

என் மனைவி நீ வாசுகி மாதிரி இருக்கனும்னு சொன்னது தப்பா போச்சு !'

ஏன் ?

'என்னை திருக்குறள் எழுத சொல்லுறாளே !

காதல் நகைச்சுவை

நம்மோட கள்ளத்தொடர்பு

தெரிஞ்சுட்டதால, உன்னை வேலையை

விட்டு நிறுத்த போறா என் மனைவி !'



'கவலைப்படாதீங்க எஜமான், உங்களுக்கு நான்

வெளியில இருந்து ஆதரவு தர்றேன் !'


---------------------------------------------------------------------------------------------------

'நம்ம கல்யாணத்துல எங்க வீட்ல
யாருக்குமே விருப்பமில்லை !'

'உனக்கு ?'

'இதென்ன கேள்வி.. நானும்
எங்க வீட்லதானே இருக்கேன் !'

-----------------------------------------------------------------------------------------------------

நம்ம காதல் புனிதமானது சிவா !'

'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்
புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !


-----------------------------------------------------------------------------------------------------

இந்த மாதிரி காதலன் கிடைக்க
நான் குடுத்துவெச்சிருக்கணும் !'

'ஏன்... கட்டின புடவையோட வந்தா
போதும்னு சொல்லிட்டானா ?'

'அட, கட்டின புருசனோட வந்தாலும்
பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !'

-----------------------------------------------------------------------------------------------------

வேலைக்காரியோட நான் சிரிச்சுப்
பேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது !'

'இது பரவாயில்லையே ! என்
மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா
எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது !'

அரசியல் நகைச்சுவை - 2

'நம்ம தலைவருக்கு விளம்பரமே பிடிக்காது !'

'அப்படியா ?'

'ஆமா. உடனே சேனலை மாத்திடுவார் !'


-----------------------------------------------------------------------------------------------

ஒன்று மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்...'

'கிழிஞ்சது போ, தலைவர் இப்போதைக்கு பேச்சை முடிக்கிற
மாதிரி தெரியலை !'


-----------------------------------------------------------------------------------------------

'பாஸ்போர்ட் வந்ததும் தலைவர் ஏன் இவ்ளோ எமோஶனல் ஆகிட்டார் ?'

'வாழக்கை முதன்முதலா ’பாஸ்’ங்கிற வார்த்தையை இப்பதான் பார்க்கிறாராம் !'


-----------------------------------------------------------------------------------------------

வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட போயிருந்தீங்களே,
எப்படி இருந்தது ?'

'ஃபுல் தண்ணி நிக்கவே முடியல

-----------------------------------------------------------------------------------------------

'நெஞ்சில் ஈட்டி பாயும் அளவிற்கு நீங்கள் எதிர்த்து
போர் புரிந்தீர்களா மன்னா ?'

'ஊஹூம்... எவ்வள்வு தூரத்தில் துரத்தி வர்றான்னு திரும்பிப் பார்த்தபோது. சண்டாளப் பாவி அம்பை எய்திட்டான்யா !'

அரசியல் நகைச்சுவை

மைக்ல ஒரு டப்பா கட்டித் தொங்க விட்ருக்கே ஏன் ?'

'தலைவர் எதிர் கட்சிய பற்றி பேசுறப்ப காறி துப்புவார் !

-----------------------------------------------------------------------------------------------

அரசியல்வாதியைக் கட்டியிருக்கக்கூடாது !'

'ஏன்?'

'சின்ன பிரச்னை வந்தா கூட வீட்டு வாசல்ல என் கொடும்பாவி
கொளுத்தறார் !'

-----------------------------------------------------------------------------------------------


தலைவருக்கு ரொம்பவும் தான் ஈகோ !'

'என்னவாம்?'

'அவரோட சிலைக்கு கூட தினசரி ஒரு பொன்னாடை போர்த்தச் சொல்றார் !

-----------------------------------------------------------------------------------------------

இது என்னங்க வரவேற்பு பேனர்ல ’கழகத்தின் கண்ணீர்ப் புகையே வருக வருக’ ன்னு வித்தியாசமா
எழுதியிருக்காங்க ?'

'அவர் பேச ஆரம்பிச்சாலே, கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுமாம் !

-----------------------------------------------------------------------------------------------

பிறந்த நாளுக்கு நம்ம தலைவர், கைதிகளுக்கு இனிப்பு
குடுக்க போனப்ப, வார்டனுக்கு ஏதுக்கு ரெண்டு லட்டு அதிகமா குடுத்தாரு?

'தலைவர் பழசை மறக்காதவர்'

போலீஸ் நகைச்சுவை

நீங்க ஏன் வீட்டு சொந்தக்காரனை கொலை பண்ணீங்க?'

'அவர்தான் எசமான், காலி பண்ணு. காலி பண்ணு.. சொன்னாரு!'


----------------------------------------------------------------------------------------------------------

ஜெயிலில்........

'சாப்பிடும்போது ஏம்பா சிரிக்கறே?'

'சிக்கன் செய்து தரலைன்னு மனைவியை அடிச்சேன்...
இப்ப வாரம் ரெண்டு தடவை சிக்கன் கிடைக்குது!'

----------------------------------------------------------------------------------------------------------


ஏதாவது சொல்ல விரும்புறியா கபாலி ?'

'டி.வி-யில ஜோடி நம்பர் ஓன் நிகழ்ச்சி மாதிரி, கேடி நம்பர் ஓன் நிகழ்ச்சியை ஆரம்பிக்கணும் எஜமான் !

----------------------------------------------------------------------------------------------------------


யோவ்! நான் இல்லாதப்ப புகார் தரவந்த பொண்ணுகிட்ட தப்பா
நடந்துக்க முயற்சி பண்ணியமே?'

'நீங்கதானே ஸார் உங்க வேலையையும் சேர்த்து என்னை பார்க்க சொல்லிட்டு போனிங்க!'

----------------------------------------------------------------------------------------------------------


சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா ?'

தெரியாதே !

'ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க !'

பில் கேட்சுக்கு சர்தார்ஜி எழுதிய கடிதம்

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.



3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin' மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.

7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?

இப்படிக்கு,

சர்தார்ஜி