சர்தார்ஜி ஜோக்ஸ்

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்.கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!


-----------------------------------------------------------------------------

சர்தார்ஜியின் பிறந்த ஊர்:

ஒரு நேர்முகத் தேர்வில்..

அதிகாரி: நீங்கள் பிறந்த ஊர் எது?
சர்தார்ஜி (ஜம்பமாக): செக்கோஸ்லோவாகியா
அதிகாரி: அதோட ஸ்பெல்லிங் சொல்லுங்க..
சர்தார்ஜி (பரிதாபமாக): ஸாரி சார்! என்னோட ஊர் சண்டிகார்.


-----------------------------------------------------------------------------


மொத்த உடலும்...

சர்தார்ஜியிடம் ஒருவர்...

“நீங்க எங்க பிறந்தீங்க..?
“பஞ்சாப்பில்...

“பஞ்சாப்பிலே எந்த பாகம்?”
“எந்த பாகமா? மொத்த உடலும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது”
-----------------------------------------------------------------------------

அப்பர் பெர்த்தில் சர்தார்ஜி சர்தார்ஜி: "அப்பர் பெர்த்திலே வந்ததாலே இராத்திரி முழுக்க தூங்கவே முடியலை" சர்தார்ஜியின் மனைவி: "லோயர் பெர்த்திலே இருந்தவங்க கிட்டே சொல்லி மாத்தியிருந்திருக்கலாமே?" சர்தார்ஜி: "லோயர் பெர்த்துலேதான் யாரும் இல்லையே! எப்படி மாத்தியிருக்க முடியும்?"

3 comments:

ப.கந்தசாமி said...

சூப்பர்.

BADUR said...

ரொம்ப அருமையாக இருக்கு நண்பரே.....
உங்களுடைய பதிவுகள் தொடர என் வாழ்த்துக்கள்..

rnr said...

sardarji ellaam migavum nallavargal

Post a Comment