மறந்து விட்டான்-கவிதை

ரோஜாவின் நிறத்தைப்
பிரித்து உதடுகள்
செய்து விட்டான்
உனக்கு பிரம்மன்...


நிலவை பிழிந்தெடுத்து
உன் முகத்தைச் சமைத்து
எம்மைக் குளிர்வித்துவிட்டான்...

சூரியனின் ஒளியைப்
பறித்து உன் கண்களைப்
படைத்து என்னை
கண்ணற்றவன் ஆக்கிவிட்டன்..

முத்துக்களைக் கோர்த்து
பல் வரிசைகளை தைத்துனக்கு
ஆட வைத்து விட்டான்
என்னை.....

ஏனோ உன் இதயத்தை
மட்டும் குத்திக் கிழிக்கும்
முட்கள் கொண்டு படைத்து
விட்டான்..

அழகுகள் இருக்கும் இடத்தில்
ஆபத்தும் இருக்கும் என்பதை
எங்களுக்கு நினைவுப்படுத்தவோ....