சர்தார்ஜி ஜோக்ஸ் (30-10-2011)

ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து [த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி...
ஜிம்மி ; லொள்.. லொள்..
த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]
த.க.நி. ; ஜாக்கி....
ஜாக்கி ; லொள்..லொள்..
த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியேசெய்கிறது]
த.க.நி. ; மாதவ்..
மாதவ் சிங் ; லொள்..லொள்..
த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்புரியாது..!

--------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது.

ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.

அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.

விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்.கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

--------------------------------------------------------------------------------------------------------------

சர்தார்ஜியிடம் ஒருவர்...

“நீங்க எங்க பிறந்தீங்க..?”

“பஞ்சாப்பில்...”

“பஞ்சாப்பிலே எந்த பாகம்?”

“எந்த பாகமா? மொத்த உடலும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது”

--------------------------------------------------------------------------------------------------------------

ஒரு நேர்முகத் தேர்வில்...

அதிகாரி: நீங்கள் பிறந்த ஊர் எது?
சர்தார்ஜி (ஜம்பமாக): செக்கோஸ்லோவாகியா
அதிகாரி: அதோட ஸ்பெல்லிங் சொல்லுங்க..
சர்தார்ஜி (பரிதாபமாக): ஸாரி சார்! என்னோட ஊர் சண்டிகார்..

0 comments:

Post a Comment