நகைச்சுவை - 29

ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?

தெரியாதே!

அட....இதுகூடப் புரியாம இருக்கியே மக்கு....
ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்.


---------------------------------------------------------------------------------------------------------------------


உங்க மாமா டெல்லிக்குப் போனாரே...
அங்க என்னவா இருக்கார்?

அங்கேயும் எங்க மாமாவாத்தான் இருக்கார்.

---------------------------------------------------------------------------------------------------------------------



உங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் யாராவது
பிறந்திருக்கிறார்களா?

இல்லை, குழைந்தைகள்தான் பிறந்திருக்கின்றன.

---------------------------------------------------------------------------------------------------------------------


மகாபாரதத்திலே உட்கார்ந்துகொண்டே
இருந்தவர் யார்?

குந்தி தேவி!


---------------------------------------------------------------------------------------------------------------------

போஸ்ட்மேன் கல் தடுக்கி எப்படி விழுவார் ?

’தபால்’-ன்னு விழுவார் !