நகைச்சுவை - 6


  • பிக்பாக்கெட் ரங்காவின் கல்யாண வீட்டில் ஒரு சௌகரியம் இருக்கு?

    என்னது?

    மொய்ப்பணத்தை அவங்களே எடுத்துப்பாங்க.

  • ஒரு பெண் குளத்தில் நீர் எடுப்பதற்காக 4 தெரு தாண்டி வந்து கொண்டிருக்கிறாள்.

    திடீரென்று வீட்டிற்கு திரும்புகிறாள் ஏன்?

    குடத்தை கொண்டு போகவில்லை.

    அதென்ன மாடில மேகக்கூட்டம் மாதிரி மேடை செட் அப்?

    அது நிச்சயதார்த்தமேடை. கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்டுவது இல்லையா.

  • டைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?

    அதை அடமானம் வைக்க முடியாதே

  • அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?

    ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?

    அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே.

  • நாய் ஏன் குரைக்குது?

    அதுக்கு கூட்டத் தெரியாது.

  • ஒரு நாள் இரவு வாக்கிப் பாய் கொண்டிருந்த ஜியை திருடன் வழி மறிக்க, இருவரும் கட்டிப் புரண்டார்கள். நீண்ட நேர சண்டையிறுதியில் திருடன் ஜியை தரையில் கிடத்தி அவர் பையிலிருந்த பர்சை எடுத்தான். அதில் 25 பைசா நாணம் மட்டுமே இருந்தது. இந்த 25 பைசாவுக்கா இப்படி சண்டை போட்டாய்? என்று ஜியை திருடன் ஆச்சிரியத்துடன் கேட்டான்.

    இதற்காகவா நீ என்னுடன் சண்டை போட்டாய்? நான் என் ஷுவிற்குள் ஒளித்து வைத்திருக்கும் 500 ரூபாய் நோட்டுக்கா

  • மாப்பிள்ளை தனியா தொழில் பண்றவருங்க

    தனியா எப்படி தொழில் செய்ய முடியும்.

  • கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.

    மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.

    மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்.

  • ஏர்போர்டில் ரிசீவ் பண்ண வந்தவர் இருவரின் உரையாடல்

    நபர்.எ - யாரை அழைத்து செல்ல வந்திருக்கீங்க.

    நபர் ஏ - 40 வருடத்திற்கு பிறகு என் தம்பி வருகிறான். அவனை அழைத்து செல்ல வந்திருக்கிறேன்.

    நபர். எ - எப்படி அவரை அடையாளம்.

  • இந்த ஸ்பின் பௌலர் பிரமாதமா போடறாரே?

    இதுக்கு முன்னே என்ன பண்ணிட்டு இருந்தார்?

    ஒரு முறுக்கு சீடை கம்பெனியிலே முறுக்கு சுத்தி சுத்தி கொடுத்தாராம்.

  • என்ன எலுமிச்சம்பழம் இவ்ளுண்டுதான் இருக்கு?

    இது எலுமிச்சம்பழம் இல்லங்க சாத்துக்குடி.

  • 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் கடை எது?

    சாக்கடை