நகைச்சுவை - 9


  • சோப்பு கடைக்காரன் பாண்ணை கட்டிகிட்டது தப்பா போச்சா ஏன்?

    வெட்டு ஒண்ணு துண்டு இரண்டா பேசுறா.

  • யாருமே அழமட்டேங்கிறாங்க

    அதுக்காக சாவு வீட்டுல டி.வி. நாடகம் போட்டு விடறதா?

    தங்கத்துக்கு மட்டும் தான் கடன் தருவோம்.

    சரிங்க நாளைக்கு என் மகள் தங்கத்தை கூட்டிட்டு வர்றேன்.

  • பக்கத்து வீட்ல போய் ரேடியோ கேட்டதுக்கு என்னை ஒரு மாதி ரி பார்த்தாங்க?

    ஏன்?

    ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்கலை, ரேடியோவே வேணும்னு கேட்டேன்.

  • என் பூட்டை உடைத்து 5 லட்சம் திருடிட்டு போயிட்டாங்க.

    பூட்டுக்குள்ளே எப்படியா 5 லட்சம் வச்சிருந்தே?

  • இவள் பெயர் மங்களம். குழந்தை இல்லை.

    மங்களம் உண்டாகட்டும்.

  • என்னது உங்க கண்ணுக்கு சளி பிடிச்சிச்சா...?

    ஆமாம், கூலிங்க கிளாஸ் போட்டிருந்தேன்.

  • எதுக்கு கலவரப் பகுதியை சுத்தி கயிற்றால் கட்டி வச்சிருக்காங்க ?

    கலவரப் பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்கு துன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க...!

  • பாக்கெட்டில் ரூ. 100 வைத்திருந்தேன் இப்பது 10 ரூபாய் தான் உள்ளது.

    நீங்க தான் பையனிடம் 100க்கு 90 எடுக்க சொன்னீங்க.

  • என் வாழ்க்கையே இருண்டு போச்சு கமலா

    ஏங்க, என்னாச்சு?

    எனக்கு நிரந்தரமா நைட்டூட்டி போட்டுட்டாங்க

  • 5ல் 7 போகுமா?

    பக்கத்தில் கடன் வாங்கினால் போகும்.

  • அவார்டு கொடுத்திருக்காங்க ஒரு ஊருக்கு

    என்ன ஊரு....?

    விருதுநகர்

  • குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்னு சொல்லு?

    தெரியைலேய?

    குளிக்கும் போதே துவட்ட முடியாதே.

  • கோழி ஏன் முட்டை போடுது?

    அதுக்கு 1,2,3, தெரியாது அதான் முட்டை போடுது,