காவல் நிலைய நகைச்சுவை


  • இரண்டு போலீஸ்காரர்கள் ஏன் அந்த வாழை மரத்தை சுற்றி சுற் றி வருகிறார்கள்.

    அங்கே கொலை விலை போகுதாம்.

  • லஞ்சம் கேட்டதால பொது மக்கள் சக்கையாய் பிழிஞ்சு எடுத்துட் டாங்களா, யாரை?

    கரும்பு இன்ஸ்பெட்டரை.

    ஹலோ.. போலிஸ் ஸ்டேஷனா? கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.

    தப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...!


  • மாமூல் ரொம்ப பப்ளிக்கா மாறிடுச்சி.

    ஏன் சலிச்சிக்கிறீங்க?

    பின்னே என்னங்க? போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க. விழா எடுத்து திருடனுக்கு மாமூல் மாணிக்கம்னு இன்ஸ்பெட்டர் பட்டம் தர்றாரு.

  • திருடனுக்கும் போலீசுக்கும் என்ன வித்தியாசம்?

    தொப்பைதான்.

  • என்னை கண்டு எல்லோரும் போலீஸ்னு நெனைச்சி பயந்துக்கிடுறாங்க.

    ஆமா இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க...!

  • வாழ்க்கையிலே பல நாள் ஜெயில்லே கழிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுறீங்களே...! என்ன தப்பு செஞ்சீங்க?

    நீங்க வேற....! ஜெயிலராயிருந்தேன்...!

  • அந்த ஆபிசர் கமிஷன் வாங்கினது தெரிஞ்சு போச்சு.

    அப்புறம்?

    கமிஷனை விசாரிக்க ஒரு கமிஷன் போட்டாங்க.

    பின்ன என்ன ஆச்சு?

    கமிஷன்கிட்டே கமிஷன் கொடுத்து தப்பிச்சிட்டார்.

  • கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?

    ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, சுப்பி ரமணின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!

  • திருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..!

    போலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...!