உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்? என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா! | ||
என் மருமக நல்ல டைப் உன்னோட சண்டை போடமாட்டாளே? ஊஹும், சண்டை போடறப்ப எனக்கு அடிப்பட்டா உடனே டாக்ட ர்கிட்டே அழைச்சிட்டு போய் முதலுதவி செஞ்சுடுவா. | ||
என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை என்ன பண்றா? என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா. | ||
என் மாமியாரை நான் மதிப்பேத இல்லை? எப்படி? அட நான் என் மாமியாரையே மதிப்பது இல்லை உன் மாமியாரையா மதிப்பேன். | ||
ஊர்ல இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க? திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி வைச்சிருந்தேன்...!
| ||
மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்? முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான். | ||
எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம். என்ன சார் அநியாயமா இருக்கு, அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா? | ||
உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்? பயங்கர ஆயுதங்களோட யார் இருக்காங்களே அவங்க பக்கம். | ||
உன் மாமியார் கிணற்றில் விழுந்தேபாது நீ பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தாயா? ஆமாம் அதுக்கு என்ன? நீ, ஏன் எதுவும் பண்ணவில்லை? டாக்டர் எதுக்கும் உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு சொல்லி இருக் கிறார். | ||
இன்னிக்கு என்ன உன் மாமியார் சந்தோஷமா இருக்காங்க? இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர் நெட்டிலே தெரியப்போகுதாம். |